வவுனியாவில் இளைஞர் மீது கத்திக்குத்து!!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வவுனியாவில் இளைஞர் மீது கத்திக்குத்து!!!!







வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளார் வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்  ஒருவர் வவுனியா, 

முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி உள்ளார் . 



 மேலும் , குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் நேற்று (13) அதிகாலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்தார்.


 காயமடைந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது .

About UPDATE