மத்துகமையை உலுக்கிய படுகொலை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மத்துகமையை உலுக்கிய படுகொலை




கூரிய ஆயுதங்களால் வெட்டி ஒருவர் இன்று (03) காலை கொல்லப்பட்டுள்ளதாக மத்துகமை பொலிஸார்    தெரிவித்துள்ளார்  .   கொல்லப்பட்டவர் மத்துகம ஓவிட்டிகல பகுதியைச் சேர்ந்த 38   வயது ஆண்  என பொலிஸார்  தெரிவித்துள்ளார்.   இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் இவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பலத்த காயமடைந்த அவர் களுத்துறை - நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மத்துகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது .

About UPDATE