சாந்தன் இன்று அதிகாலை காலமானார் !! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சாந்தன் இன்று அதிகாலை காலமானார் !!

 


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுவிடு க்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கின்ற சுதேந்திர ராஜா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.


 சென்னை ராஜிவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று 28 காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை  அனுபவித்து வந்த நிலையில்  விடுவிக்கப்பட்டார். 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது .


இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது . இதன் பின்னர் கடந்த 2022 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் .


இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 24 திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று காலமானார் 

About UPDATE