சடலம் மீட்பு - கொலையா தற்கொலையா என விசாரணை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சடலம் மீட்பு - கொலையா தற்கொலையா என விசாரணை

 

யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

 

ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.

 

உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இது கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்

About ஈழ தீபம்