வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

பஞ்சம் தீர, கடன் அடைய, பணம் சேர இந்த செடியை இந்த திசையில் வைத்து இப்படி செய்தாலே போதும் நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.வாஸ்து சாஸ்திரத்தின்படி, மகாலட்சுமியின் அருளையும் ஆசியையும் பரிபூரணமாக பெற வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.,வாஸ்து சாஸ்திரம் மனித வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஏனென்றால் வாஸ்து சாஸ்திரத்தில் மனித வாழ்க்கை தொடர்பான ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்க்க பல விதிகளும் வழி முறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் செடிகளை நடுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் பரவுகிறத தடைகள் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆனாலும் நீங்கள் வீட்டில் வாஸ்து செடிகளை சரியான முறையில்,சரியான திசையில் நடும்போது அது நன்மைகளை பெருக்கும். வாஸ்து படி, சில செடிகளை வீட்டில் நடுவதன் மூலம், மகாலட்சுமியின் அருளைப் பெறலாம். இதனால் உங்கள் கடன்கள் அனைத்தும் தீர வழி பிறக்கும்.துளசிவாஸ்துபடி, துளசி செடி மிகவும் புனிதமானது. இதனை நம் வீட்டில் எளிமையாக நடலாம்துளசி செடி மருந்தாகவும் பயன்படுகிறது என சொல்லலாம். இந்து மதத்தில் இது மிகவும் முக்கியமானது.வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை வீட்டில் நடுவது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது என்று கூறப்படுகிறது.வாஸ்து சாஸ்திர விதிகளின்படி துளசி செடியை தெற்கு திசையில் நடக்கூடாது. இந்த திசையில் இந்த செடியை நடுவதன் மூலம், பொருளாதார நிலை மோசமடையும்.வாஸ்து சாஸ்திரத்தின்படி, துளசி செடியை கிழக்கு அல்லது வடக்கு, வடகிழக்கில் நடுவது எப்போதும் மங்களகரமானது.இந்து மதத்தில், துளசியைத் தவிர, ஷமியின் செடியும் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறதுஇந்த செடியை வீட்டில் நடுவது மிகவும் நல்லது. சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த செடியாக ஷமி செடி கூறப்படுகிறது.வாஸ்து விதிகளின்படி, ஷமி செடிகளை தெற்கு திசையில் நடக்கூடாது.இந்த திசையில் நீங்கள் ஷமி செடியை நட்டால், நீங்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். வாஸ்துபடி, ஷமி செடியை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் நட வேண்டும்.மணி பிளாண்ட்வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மணி பிளாண்ட் செடியை நடுவதன் மூலம், பொருளாதார நிலை மேம்படும்.வாஸ்து படி, வீடு, அலுவலகங்களில் இந்த செடிகளை நடுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறதுதெற்கு திசையில் இதை நடக்கூடாது. தென்கிழக்கு திசையில் நடுவது நல்லது.வாழை :இந்து மதத்தில் வாழைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.வாழைப்பழம் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது வாழைப்பழம் விஷ்ணுவுக்கு மிகவும் விருப்பமானது என்று நம்பப்படுகிறது.வாஸ்துபடி, வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் நடக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வாழை செடியை வடகிழக்கில் நடுவது எப்போதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

About ஈழ தீபம்