துரதிஷ்டவசமாக நிகழ்ந்த வாகன விபத்து! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

துரதிஷ்டவசமாக நிகழ்ந்த வாகன விபத்து!

பாதசாரி கடவை வழியாக வீதியின் மறுபுறம் நடந்து சென்ற தாயும் மகளும் துரதிஷ்டவசமாக வாகன விபத்து ஒன்றில் சிக்கியுள்ளனர்பண்டாரகம, கலனிகம பகுதியில் இன்று (06) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஹொரணை வலய கல்வி அலுவலகத்திற்குச் சொந்தமான வேன் ஒன்றுடனேயே இருவரும் மோதியுள்ளனர்.பண்டாரகம, பத்தேகொட பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய தாயும் அவரது 15 வயதுடைய மகளும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்தில் 53 வயதுடைய தாயாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயர்தரப் பரீட்சையைக் கவனிப்பதற்காக உதவிக் கல்விப் பணிப்பாளருடன் வேன் சாரதி ஹொரணையில் இருந்து பண்டாரகம நோக்கி வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.வேன் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About ஈழ தீபம்