அப்பா மனச அதிகமா பாதிச்சது அதுதான்.. அதனாலதான் அப்பா உடைஞ்சு போயிட்டாங்க'.. கலங்கும் விஜயகாந்த் மகன்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அப்பா மனச அதிகமா பாதிச்சது அதுதான்.. அதனாலதான் அப்பா உடைஞ்சு போயிட்டாங்க'.. கலங்கும் விஜயகாந்த் மகன்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனதளவில் உடைந்து போனதற்கான காரணத்தை கூறியுள்ளார்
 அவரது இளைய மகனான சண்முக பாண்டியன்.தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. விஜயகாந்த்தின் உடல் கடந்த 29 ஆம் தேதி மாலை முழு அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது
.விஜயகாந்தின் உடல் நல் அடக்கம் செய்யப்பட்ட நாள் முதலே ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் அரசியல் பிரமுகர்களும் சினிமா நட்சத்திரங்களும் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கும் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், அரசியலிலும் சாதனை படைத்தார். 2005ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த், தமிழக அரசியலில், மாற்று சக்தியாக இருந்தார். கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்ற இரு பெரும் ஜாம்பவான்கள் இருந்த போதே தமிழக அரசியலில் அதிக வாக்குகளை பெற்று மாற்றத்திற்கு வித்திட்டார்2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜயகாந்தின் தேமுதிக குறிப்பிடத்தகுந்த இடங்களை பெற்றது

. அதனை தொடர்ந்து பிரதான எதிர்க்கட்சித் தலைவரானார் கேப்டன் விஜயகாந்த். ஆனால் அந்த பதவி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவரது எம்எல்ஏக்களின் கட்சி தாவலால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியை இழந்தார் விஜயகாந்த்.அதிகம் நம்பிய மற்றும் நெருங்கிய நண்பர்களே கட்சியில் இருந்து விலகியதால் நிலைகுலைந்து போனார் விஜயகாந்த். விஜயகாந்த் மறைவுக்கு முன்பு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த், கட்சியினர் செய்த துரோகம்தான் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட காரணம் என்று கூறி வேதனைப்பட்டார். தற்போது விஜயகாந்த் காலமாகியுள்ள நிலையில் பலரும அவர் குறித்தும் அவருடன் பழகிய அனுபவங்கள் குறித்து கண்ணீருடன் பகிர்ந்து வருகின்றனர்.அந்த வகையில் விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன், 


விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில் அப்பாவுடன் பல வருடங்கள் நட்பாக பழகியவர்களும், அவரால் வளர்ந்து நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் மற்றும் அவரால் எம்எலஏவானவர்கள், எம்எல்ஏவாக இருக்கும்போதே கட்சி தாவி அதிமுகவில் சேர்ந்தனர். சிலர் வேறு கட்சிகளிலும் சேர்ந்தார்கள்.இதனால் அப்பா மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டார். உடைந்து போய்விட்டார். அவர் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. இருந்தாலும் ரொம்ப வருத்தப்பட்டார். அந்த துரோகங்களை அப்பாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 


அதை பலமுறை அவரிடம் நான் கவனித்திருக்கிறேன். அவர்கள் எல்லாம் அப்பாவுடன் இருந்திருந்தால் அவர் தைரியமாக இருந்திருப்பார் என உருக்கமாக பேசியுள்ளர் சண்முக பாண்டியன்.

About ஈழ தீபம்