A/L பரீட்சை மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

A/L பரீட்சை மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி!

காலி பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில்  (20) நடைபெற்ற கணக்கியல் முதலாம் வினாத்தாள்க்கான கணிப்பான் பாவனையின் போது மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  கணிப்பான்களை பரிட்சை நிலைய பொறுப்பதிகாரி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பரீட்சார்த்திகள் சிலர் பரீட்சை மண்டபத்திற்குள் அங்கீகரிக்கப்படாத கணிப்பான்களை கொண்டு வந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

 , கணிப்பான்களை மீண்டும் தெரிவு செய்ய சில நிமிடங்கள் எடுத்துள்ளதாகவும், விடை எழுத  பொறுப்பதிகாரி மேலதிக நேரத்தை வழங்கவில்லை எனவும் மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இதனால் தமது பிள்ளைகளுக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளார் .

About ஈழ தீபம்