3 விநாடி நடனமாட ரூ.2 லட்சம் சம்பளம் கேட்ட இன்ஸ்டா பிரபலம்! ஷாக்கான ரசிகர்கள்.. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

3 விநாடி நடனமாட ரூ.2 லட்சம் சம்பளம் கேட்ட இன்ஸ்டா பிரபலம்! ஷாக்கான ரசிகர்கள்..

கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘அரணம்’ படத்தை தமிழ் திரைக்கூடம் தயாரிக்கிறது. இதன் பாடல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைப்பெற்றது. அப்போது படத்தின் நாயகன் பிரியன் சில தகவல்களை பத்திரிக்கையாளர்களிடம் கலந்து கொண்டார்.தமிழில் சூப்பர் ஹிட் மசாலா பாடல்களான மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலரசே ஆகிவற்றின் வரிகளை எழுதியவர், பிரியன். இவர் முதன் முறையாக அரணம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மோகன்.ஜி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், இப்படத்தில் நடனமாட ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் ரூ.2 லட்ச ரூபாய் சம்பளமாக கேட்டதாக குறிப்பிட்டார். அந்த பிரபலம் யார் தெரியுமா அமலா ஷாஜதற்போது திரைத்துறைக்கு வருபவர்களில் பலர்இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்களாக உள்ளனர். அப்படி, தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர், அமலா ஷாஜி. டிக் டாக் தளம் இந்தியாவில் பிரபலமாக இருந்த போது, பாடலுக்கும் டைலாக்கிற்கும் வாயசைத்து வீடியோ பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து, இன்ஸ்டாகிராம் தளத்திலும் பிரபலமாக மாறத்தொடங்கினார். கேரளாவை சேர்ந்த இவர், தனது தங்கையுடன் சேர்ந்து அடிக்கடி நடமாடி வீடியோக்கள் போடுவதும் வழக்கம். இவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் 4.1 ஃபாலோவர்ஸ்கள் உள்ளனர்.30 விநாடி நடனத்திற்கு ரூ.2 லட்சம் சம்பளம்.அரணம் பட விழாவில் பேசிய படத்தின் ஹீரோ பிரியன் “இன்ஸ்டாவில் நடனமாடும் பெண் ரூ.50 ஆயிரம் கேட்கிறார்…” என்றார். மேலும், “கேரளாவில் நடனமாடும் பெண் ஒருவர் 2 லட்சம் சார் என்றார். ஏன் என்று கேட்டேன். அதற்கு அவர், ‘30 செகண்ட்ஸ் சார்’ என்றார். இதற்கு 2 லட்சமா.

.இதை எங்கள் கலைஞரிடம் கொடுத்தால் விடிய விடிய வேலை பார்ப்பார்கள். அவர் வேறு யாருமில்லை நம்ம அமலா ஷாஜிதான் வேற யாரு” என்றார்பாடலாசியர் பிரியன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன் , கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிகே படத்தொகுப்பு செய்துள்ளார். சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார்.அமலா ஷாஜி;இவ்வாறு சம்பளம் கேட்டதை பிரியன் மேடையில் கூறியதை பலரும் வன்மையாக கண்டித்துள்ளனர். “உங்களுக்கு வேண்டும் என்பதால்தானே அவரிடம் கேட்டீர்கள். உங்களுக்காக யாரும் இலவசமாக வந்து நடனமாட முடியாது” என்று பலர் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். இன்னும் சிலர், “கலையையும் கலைஞனையும் மதிக்க வேண்டும். அவர்கள் கேட்கும் தொகை சரியானதாக இருந்தால் அதை ஊக்குவிக்க வேண்டும்” என்று கூறியிருக்கின்றனர்.


About UPDATE