பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் உண்டு... தமிழ்நாடு அரசின் புதிய உத்தரவு என்ன? - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் உண்டு... தமிழ்நாடு அரசின் புதிய உத்தரவு என்ன?

 

பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தொகுப்பு வழங்குவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல்பரிசுத்தொகுப்பாக வழங்கப்படும்‌ 

என கடந்த ஜன.2ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.


 

பொங்கலுக்கு ரூ.1000

அதுமட்டுமின்றி, ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள்

வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள்அனைவருக்கும்

 1,000 ரூபாய்பொங்கல்பரிசாக நியாயவிலைக்கடைகளில்பொங்கல்திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும்‌ 

என்று தமிழ்நாடு முதலமைச்சர்மு.. ஸ்டாலின்கடந்த ஜன. 5ஆம் தேதி அறிவித்திருந்தார்.

 

மேலும், பொங்கல்திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும்‌ 15ஆம்தேதி வழங்கப்பட்டு வரும்கலைஞர்மகளிர்உரிமைத்தொகையினை

இந்த மாதம்பொங்கல்திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும்‌ 10ஆம்தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவை மகளிர்உரிமைத்தொகை

பெற்றுவரும்‌ 1 கோடியே 15 இலட்சம்மகளிரின்வங்கிக்கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதாவது, ஒன்றிய மற்றும் மாநில அரசு பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் தவிர்த்து ஏனைய அட்டைதாரர்களுக்கு

பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்த நிலையில் தற்போது அனைத்து அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இருப்பினும், வெள்ளை அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுமா என்ற குழப்பம் நீடிக்கிறது.

 

தற்போதைய உத்தரவு என்ன?

 

ஏற்கெனவே, ரேசன் அட்டைதாரர்களுக்கு ரேசன் கடைகள் மூலம் டோக்கன் விநியோகிக்கப்பட்டு

வரும் நிலையில், நாளை முதல் 1000 ரூபாய் ரொக்கம் விநியோகிக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்

அனைவருக்கும் 1000 ரூபாய் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால்‌, பொங்கல்திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள 

இலவச வேட்டி- சேலைகள்அனைத்தும்தயார்செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், பொங்கல்பரிசுத்தொகுப்புடன்சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத்தேவையான அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About UPDATE