மாணவியை பகிடிவதை - மாணவர்கள் கைது! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மாணவியை பகிடிவதை - மாணவர்கள் கைது!


சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் பல்கலைக்கழகத்தின் 4 ஆம் ஆண்டு மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


 இதனடிப்படையில் கடந்த 14 ஆம் திகதி 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சமனலவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர். சந்தேகத்திற்குரிய மாணவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் 23, 24 மற்றும் 25 வயதுடைய மொரவக, ருக்கஹவில, அலுஹ்தாராம, இமதுவ மற்றும் கிடலாவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என சமனலவெவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகளை ஒழிப்பதற்கு இலங்கையில் 1998 ஆம் ஆண்டு 20 இலக்க கல்வி நிறுவனகளில் பகிடிவத்தையும் வேறு வகையான வன் செயல்களும் தடைசெய்தல் சட்டம்   உருவாக்கப்படுள்ளது 

About UPDATE