செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. பிர­தமரு எச்­ச­ரிக்­கை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. பிர­தமரு எச்­ச­ரிக்­கை

பிர­த­ம­ருக்கு எதி­ரான  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யின்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வழங்­கிய  வாக்­கு­று­தி­களை  நிறை­வேற்றா விட்டால் எதிர்­வரும் வரவு -செலவுத் திட்­டத்­துக்கு எதி­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வாக்­க­ளிக்­கு­மென வன்னி மாவட்ட  கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், பாரா­ளு­மன்ற  குழுக்­களின் பிரதித் தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் நேற்று வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தலின் போது வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் இன்­ற­ளவில் முழு­மை­யாக       நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இந்த நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி முன்­வைத்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளிப்­பது தொடர்பில் பிர­த­மரைச் சந்­தித்­த­போது சில கோரிக்­கை­களை முன்­வைத்தோம். இதில் முக்­கி­ய­மா­னது, வடக்கு, கிழக்­கி­லுள்ள இளைஞர், யுவ­தி­க­ளுக்கு தொழில் வாய்ப்­பு­களை வழங்­கு­வது. எமது கோரிக்­கை­களை பிர­தமர் ஏற்­றுக்­கொண்­டுள்ளார்.
பிர­தமர் இந்தக் கோரிக்­கை­களை  நிறை­வேற்­றா­விட்டால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

About Unknown