மது­பானசாலைகள் பூட்டு நான்கு தினங்­க­ளுக்கு... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மது­பானசாலைகள் பூட்டு நான்கு தினங்­க­ளுக்கு...


புத்­தாண்டை  முன்­னிட்டு நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் உள்ள மது­பானசாலைகளை எதிர்­வரும் 13 ஆம் ,14ஆம் திக­தி­களிலும் வெசாக் பூரணை தினத்தை முன்­னிட்டு 29 ஆம், 30 ஆம் திக­தி­களிலும் மூடுவதற்கு அர­சாங்கம் உத்­த­ர­விட்­டுள்­ளது.  

அந்­த­வ­கையில் இந்த மாதத்தில் நான்கு நாட்கள் மது­பானசாலை­களை மூட­வேண்டும் என அர­சாங்கம் கட்­டாய அறி­வித்­தலை விடுத்­துள்­ளது. தமிழ், சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு எதிர்­வரும் 13, 14 ஆம் திக­தி­க­ளிலும், அதன் பின்னர் இந்த மாத இறு­தியில் வெசாக் பூரணை தினத்தை முன்­னிட்டு 29,30 ஆம் திக­தி­க­ளிலும் நாட்டில் உள்ள சகல மது­பானசாலை­களையும் மூட அர­சாங்கம் உத்­த­ரவு விடுத்­துள்­ளது. 
மேலும் தமிழ்–சிங்­கள புத்­தாண்டு காலப்­ப­கு­தியில் நாட்டில்  குற்­றங்கள் மற்றும் மது­பான விற்­ப­னைக்கு உரிமம் பெற்ற இடங்­களில் இடம்­பெறும் முறை­கே­டு­களை தடுப்­ப­தற்­காக சிறப்பு கண்­கா­ணிப்பு வேலைத்­திட்­ட­மொன்றை மது­வரித் திணைக்களம் முன்­னெ­டுக்­க­வுள்­ளது. முறை கேடாக இடம்­பெறும் சம்­ப­வங்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை பதிவு செய்ய  0112045077 என்றதொலை­பேசி இலக்­கத்­திற்கு அல்லது 0112877882 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மதுவரித் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. 

About Unknown