சென்னையில் திரையுலகினர் போராட்டம்!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சென்னையில் திரையுலகினர் போராட்டம்!!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் திரையுலகினர் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் கடந்த 3ஆம் திகதி உணவு ஒறுப்புபு் போராட்டமும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கடந்த 05ஆம் திகதி முழு அடைப்பு போராட்டமும் நடந்தது.
தொடர்ந்து திருச்சி முக்கொம்புவில் இருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்ராலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை நேற்றுத் தொடங்கினார். இன்று அவர் தஞ்சை சூரக்கோட்டையில் இருந்து 2 ஆவது நாள் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர்-, நடிகைகள் இன்று சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழி போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் விஜய், சிவகுமார் மற்றும் சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

About Unknown