வாழைத்தோட்டம் பகுதியில் கடந்த 7ஆம் திகதி மீட்கப்பட்ட தலையின் உடல் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.
உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பாதாள உலக உறுப்பினரான கொஸ்மல்லி என்பவரின் தலை கடந்த 7ஆம் திகதி கொழும்பு – 12 வாழைத்தோட்டம் பகுதியில் மீட்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து உடல் அங்குணுகொலபெலெஸ்ஸ – முரவெடிஹேன – கோட்டாபயகம பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.