பிரே­ரணை குறித்த விவாதம் இன்று - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பிரே­ரணை குறித்த விவாதம் இன்று

Image result for ஐ.நா. மனித உரிமைஜெனி­வாவில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை  இலங்கை அர­சாங்கம்  எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கி­றது என்­பது குறித்த விவாதம்  மனித உரிமை பேர­வையில் இன்று  புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.  அதன்­போது, இலங்கை குறித்த இடைக்­கால அறிக்­கையை  ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் வெளி­யிட இருக்­கிறார். இந்த அறிக்கை   ஏற்­க­னவே வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் அதன் பரிந்­து­ரை­களை கொண்ட சாரம்­சமே எதிர்­வரும் புதன்­கி­ழமை  வெளி­யி­டப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்த அறிக்­கையை வெளி­யிட்ட பின்னர் இலங்கை தொடர்­பாக   மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன்   சிறப்­பு­ரை­யாற்­ற­வி­ருக்­கின்றார். 
 ஏற்­க­னவே இலங்கை குறித்த அறிக்­கையை  வெளி­யிட்­டி­ருந்த  செயிட்  அல் ஹுசைன்  இலங்கை  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை  பெற்­றுக்­கொ­டுப்­பது தொடர்பில்  சர்­வ­தேச சமூகம்   மாற்று வழி­களை   ஆரா­ய­வேண்­டு­மென  கேட்­டி­ருந்தார். அதன்­படி  புதன்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள விவா­தத்தில் இலங்கை தொடர்பில் உரை­யாற்­ற­வுள்ள செயிட் அல் ஹுசைன் இலங்கை விவ­காரம் குறித்து மாற்று வழியை ஆரா­யு­மாறு   மீண்டும்    சர்­வ­தேச நாடு­க­ளிடம் கோரிக்­கை­வி­டுப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
இதே­வேளை விவா­தத்தில்  இலங்­கையின் சார்பில்   வெளி­வி­வ­கார அமைச்சர்  திலக் மாரப்­பன  உரை­யாற்­ற­வி­ருக்­கின்றார். இதன்­போது ஜெனிவா பிரே­ர­ணையை   அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம்  எவ்­வா­றான  வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது என்­பதை திலக் மாரப்­பன தனது உரையில் வெளி­யி­டுவார். அதே­போன்று  தாம்  அர­சியல் ரீதியில்   எதிர்­கொண்­டுள்ள சவால்கள் குறித்து இந்த உரையில்  விளக்­க­ம­ளிப்பார் என   தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதே­போன்று சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­தி­களும்  இந்த விவா­தத்தில்  உரை­யாற்­ற­வி­ருக்­கின்­றனர். திலக் மாரப்­ப­ன­வுடன் அமைச்­சர்­க­ளான சரத் அமு­னு­கம, மற்றும் பைஸர் முஸ்­தாபா இன்­றைய விவா­தத்தில் இலங்­கையின் சார்பில் பங்­கேற்­கின்­றனர். 
மேலும் சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை, சர்­வ­தேச மனித உரிமை கண்­கா­ணிப்­பகம் ஆகி­ய­வற்றின் பிர­தி­நி­தி­களும்   இலங்கை குறித்த இந்த விவா­தத்தில் உரை­யாற்ற உள்­ளனர்.  2015ஆம் ஆண்டு இலங்­கை­தொ­டர்­பாக நிறை­வேற்­றப்­பட்ட   பிரே­ர­ணைக்கு   இலங்கை அர­சாங்கம்  இனை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.  எனினும்  கடந்த 2017ஆம் ஆண்டு வரை குறித்த பிரே­ர­ணையை  முழு­மை­யாக இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­தாதன் கார­ண­மாக 2017 ஆம் ஆண்டு மீண்டும்  இரண்டு கால அவ­கா­சத்­திற்கு இந்த பிரே­ரணை உள்­ளாக்­கப்­பட்­டது.   அந்­த­வ­கையில்  2019ஆம் ஆண்­டுக்குள்  இந்தப் பிரே­ரணை   அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். எனினும் தற்போது   கால அவகாசத்தில் ஒருவருடம் முடிந்துள்ள நிலையில்  முன்னேற்றம் எதுவும் ஏற்படுத்தப்படாத சூழலே காணப்படுகின்றது. 
இந்தப் பின்னணியிலேயே   இன்றைய தினம்   இலங்கை குறித்த விவாதம் ஐக்கியநாடுகள்  மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளமை  குறிப்பிடத்தக்கது

About Unknown