வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்றத்தை விட்டு சபாநாயகர் வெளிநடப்பு!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்றத்தை விட்டு சபாநாயகர் வெளிநடப்பு!!

Image result for பாகிஸ்தான்வழக்கமாக பாராளுமன்றத்தை விட்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதை காண்டிருக்கிறோம். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் வெளிநடப்பு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் சபாநாயகராக பதவி வகிக்கும்  அயாஸ் சாதிக் சபையை நடத்திக்கொண்டிருந்த போது உள்துரை தொடர்பாக உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார். 
இதற்கு பதில் அளிக்க வேண்டிய குறிப்பிட்டதுறை மந்திரி சபையில் பிரசன்னமாகாததால், "பாகிஸ்தான் பாராளுமன்ற விதிகளை மீறி மந்திரி செயப்பட்டதால் எரிச்சல் அடைந்த சபாநாயர், பாராளுமன்றத்தினை அவமதிப்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். எனவே நான் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்பு செய்கிறேன்" என கூறி வெளியேறினார். 
மேலும் "இனி எந்த ஒரு நாடாளுமன்ற அமர்வையும் ஏற்று நடத்தமாட்டேன்" என கூறியுள்ளார்.

About Unknown