நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படை பிரதானிகளின் காரியாலயம் 24 மணி நேர விசேட சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டில் குழப்ப நிலையினை ஏற்படுத்தும் நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான தகவல்களை 0711261261 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அல்லது helpdesk@dgi.gov.lk எனும் மின்னஞ்சலுக்கோ தெரியப்படுத்துமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.