பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் தனது தவறை உணர்ந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
தென்னாபிரிக்காவு டனான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார்.
இந்நிலையில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தான் செய்த தவறை உணர்ந்த டேவிட் வோர்னர் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில், 'அவுஸ்திரேலியா மற்றும் உலகத்திலுள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் என்னை மன்னிக்க வேண்டும். நான் செய்த தவறு கிரிக்கெட் துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத் தவறினால் சிறு வயதிலிருந்து நான் நேசித்த கிரிக்கெட் மீது பெரும் கறை படிந்துள்ளது. அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என வோர்னர் குறிப்பிட் டுள்ளார்