மூலிகை அதன் பயன்களும்...... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மூலிகை அதன் பயன்களும்......

Image result for கரிசலாங்கண்ணிசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று  யாரை கேட்டாலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், சிறுநீரகப் பழுது, புற்றுநோய், இதய நோய் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.


‘‘நம் வீட்டைச் சுற்றி எத்தனையோ மூலிகைகள் செடி, கொடி, மரமாக கிடக்கிறது.  ஆனால் அதை என்னவென்று தெரியாமல், மதிக்காமல், அதைப் பயன்படுத்துவதில்லை. உலகத்திலேயே எல்லா மூலிகைகளும் கிடைப்பது தமிழ் நாட்டில்தான். இது பல சித்தர்கள் வாழ்ந்த பூமி. அவர்கள் எத்தனையோ மூலிகை பொக்கிஷங்களை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றுள்ளனர். நாம்தான் மறந்து விட்டோம்.



* தழுதாழை - இது 84 விதமான வாதத்தை குணப்படுத்தும். 

* கரிசலாங்கண்ணி - கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும்.

* வல்லாரை-மூளையை பலப்படுத்தும்.

* பூனைமீசை- சிறுநீரகத்தை பலப்படுத்தும்.

* கரு ஊமத்தை-நாய்க்கடிக்கு நல்ல மருந்து. 

* நிலவேம்பு-விஷக் காய்ச்சலை 
குணப்படுத்தும்.

* தொட்டால் சுருங்கி-சர்க்கரை நோயை 
கட்டுப்படுத்தும். 

* ஆடுதீண்டாபாளை-பாம்புக் கடியை 
குணப்படுத்தும்.

* யானைநெருஞ்சில்- உடல் உட்பகுதியில் உள்ள சூட்டை தணிக்கும். 

* சிவனார் வேம்பு- சொரியாசிஸ் எனப்படும் தோல் நோயை குணமாக்கும். 

* அருவதாம்பச்சை-மாந்தத்தை தடுக்கும், பாம்புகள் வராது. 

* சிருகன்பீளை-சிறுநீரக கற்களை 
கரைக்கும்.

* தூதுவளை- சளியை கரைக்கும்.

* வசம்பு- நோய்க்கிருமிகளை அழிக்கும். 

* ஓரிதழ் தாமரை-ஆண்மையை பெருக்கும். கட்டிகளை கரைக்கும்.

* நீர்பிரம்மி-ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சித்தாமுட்டி - மூட்டுவலியை குணப்படுத்தும்.

* பேய்விரட்டி-விஷப்பூச்சிகளை விரட்டும்.

* ஆடாதோடா- இருமலை தடுக்கும்.

* நித்தியகல்யாணி-புற்றுநோய் வராமல் தடுக்கும். 

* நத்தைசூரி- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

* விஷ்ணு கிரந்தி-காய்ச்சலை தணிக்கும். 

* கோபுரம்தாங்கி-புழுவெட்டை தடுக்கும். 

* நேத்திர மூலி-கண் நோய்க்கு மருந்து. 

* கள்ளிமுளையான்-பசியை உண்டாக்கும்.

* சர்ப்பகந்தா-மனநோய்க்கு நல்ல மருந்து.

*  சித்திரமூலம்-வலியை போக்கும்.

*  பொடுதலை-இதயத்தை பாதுகாக்கும்.

About Unknown