தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியினர் பந்தினை சேதப்படுத்திய பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் குறித்த சர்ச்சை கிரிக்கெட் அரங்கில் பெரும் பூதாகரமாக வெளியாகி அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் மற்றும் வீரர்களுக்கு ஐ.சி.சி. மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஆகியன தண்டனைகள் வழங்கின.
இந்நிலையில், தண்டனை அறிவிக்கப்பட்டதன் பின்னர், குற்றம் சுமத்தப்பட்டிருந்த வீரர்களும் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரும் குறிப்பாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினர்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவுஸ்திரேலிய அணியின் தலைவர் குற்றத்திற்காக கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், அவுஸ்திரேலியாவின் பதவி விலக்கப்பட்டுள்ள அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் கமரன் பென்க்ராஃப்ட் ஆகியோரும் கருத்து வெளியிட்டனர்.
தமது செயற்பாட்டுக்கு அவர்கள் இதன்போது மன்னிப்பு கோரி இருந்தனர். இதன்போதே ஸ்டீவன் ஸ்மித் கண்ணீர் சிந்தி மன்னிப்புக் கோரியுள்ளார்.