கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 10.00 மணியுடன் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
கண்டி - திகன நகரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.