தற்போது 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசரகால விதி விதானங்களுக்கு அமைவாக 14 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்ப்ட்டு விசாரணைச் செய்யப்ப்டும் பிரதான சூத்திரதாரியான அமித் வீரசிங்கவிடமிருந்து வெளிபப்டுத்தப்ப்ட்ட தகவல்களுக்கு அமைவாக இந்த அலுவலகத்தை சுற்றி வளைத்ததாகவும் இதன்போது ஆயிரக்கணக்கான இனவாதத்தை தூன்டும் ஆயிரக்கணக்கான போஸ்டர்கள், பதாதைகள், கையேடுகளை கைப்பற்றியதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த இந்த திடீர் சுற்றிவளைப்பின் போது, பொதுமக்களிடையே பகிந்தளிக்க தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான மிககடுமையாக இனவாதத்தை தூன்டும் சொற்பிரயோகங்கள் அடங்கிய கையேடுகள், போஸ்டர், பதாதைகளுக்கு மேலதிகமாக பல வங்கிப் புத்தகங்களும் சிக்கியுள்ளன. அத்துடன் நிதி வைப்பிலிட்டமைக்கான பல பற்றுச் சீட்டுக்களும் அங்கிருந்து கைப்பற்ரப்ப்ட்டுள்ள நிலையில் அமித் வீரசிங்கவின் மஹசொஹொன் பலகாயவின் நிதிப் பின் புலலம் தொடர்பில் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இதனைவிட அந்த அலுவலகத்தில் இருந்து வாகன அனுமதிப்பத்திரங்கள், இனவாத சொற்பதங்கள் அடங்கிய விபரங்கள், ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்த தயார் செய்யப்ப்ட்டிருந்த இலச்சினையுடன் கூடிய ஒலிவாங்கி என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் அமித்திடம் முன்னெடுக்கப்ப்ட்ட விசாரணைகளில் வன்முறைகளுக்கு என தயார்ச் எய்யப்ப்ட்ட 7 பெற்றோல் குன்டுகளையும் மீட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இந் நிலையில் அந்த அலுவலகத்தில் இருந்த 4 கனணிகளின் சி.பி.யூ.க்களையும் கைப்பற்றிய பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அவற்றையும் நான்காம் மாடிக்கு எடுத்து வந்துள்ளனர்.
அந்த சி.பி.யூ. க்களும், அமித்தின் தொலைபேசியும் அதில் உள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்து வெளிபப்டுத்துவதற்காக பயங்கரவாத புலனயவுப் பிரிவினரால் குற்றப் புலனயவுப் பிரிவின் சிறப்பு புலனயவுக் குழுவிடம் கையளிக்கப்ப்ட்டுள்ளன. குறிப்பாக அமித்தின் தொலைபேசிக்கு வந்த அழைப்புக்கள், அவர் அழைத்த அழைப்புக்கள் குறுஞ்செய்திகள் தொடர்பில் தகவல்களை வெளிபப்டுத்தவும், சி.பி.யூ.வில் உள்ள தரவுகளை பெறவுமே இவாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு நிபுணர்கள் அடங்கிய கூழ்விஒடம் கையளிக்கப்ப்ட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.