ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழு இன்று அவ­ச­ர­மாக கூடு­கின்­றது.! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழு இன்று அவ­ச­ர­மாக கூடு­கின்­றது.!

கூட்டு எதிர்க்கட்­சி­யி­னரால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஐக்­கிய தேசிய கட்­சியின்  செயற்­குழு இன்று கூடி ஆராய உள்­ள­தாக  அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார். 
  
கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு விட­யங்­களும் முக்­கி­யத்­து­வத்­துடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.  அமைச்­ச­ரவை தீர்­மா­னங்கள் அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று புதன் கிழமை அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. அதி­லேயே  அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அவர் தொடர்ந்தும் கூறு­கையில் ,
ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூடி பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை ஆராய்ந்­துள்­ளது. இதன் போது கட்சி என்ற வகையில் அதனை தோல்­வி­ய­டைய செய்­வ­தற்கு அனை­வரும் ஒன்­றி­ணை­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர். இன்று கட்­சியின் செயற்­குழு கூடி நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஆராய உள்­ளது.  எவ்­வா­றா­யினும் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து பேச்­சுக்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். தலை­மைத்­துவ விடயம் மாத்­திரம் அல்ல ஏனைய பதவி நிலைகள் மற்றும் அவற்றின் அதி­கா­ரங்கள் குறித்தும்  பரந்­த­ளவில் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது. எவ்­வா­றா­யினும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. அதற்கு பின்னர் கட்­சியின் மறு­சீ­ர­மைப்பு குறித்து இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும். 
ஆனால் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை விவ­கா­ரத்­திற்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து உறுப்பினர்களும் செயற்படுகின்றனர். கட்சிக்குள் இருந்து கொண்டு எதிராக செயற்படுபவர்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்

About Unknown