குறித்த சடலம் நேற்றிரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளை, சாலியாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விவாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.