எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆனந்த அளுத்கமேவிற்கு எதிராக வழக்கு தாக்கல்!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆனந்த அளுத்கமேவிற்கு எதிராக வழக்கு தாக்கல்!!!

கண்டி - நாவலபிட்டி வீதியை மறித்து மஞ்சல் கடவையில் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமேவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாவலபிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்ஷவை இடமாற்ற கோறி கடந்த சனிக்கிழமை கண்டி நாவலபிட்டி பிரதான வீதியை மறித்து மஞ்சல் கடவையில் படுத்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேவிற்கு எதிராக நாவலபிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த சனிகிழமை காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நாவலபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சல் கோட்டு கடவையில் படுத்து சுமார் 9 மணித்தியாலங்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் சாலை ஒழுங்கு மீறலின் கிழ் இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
 இதற்கான அனைத்து குற்றவியல் பத்திரங்களும் வெள்ளிக்கிழமை நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அஜர்படுத்த பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகிறது.
இதேவேலை இவரோடு மேலும் 12 பேர் தொடர்பு பட்டுள்ளதாகவும் அவர்களுல் சிலர் நாவலபிட்டி நகரசபை மற்றும் பிரதேச்சபையின் கிழ் கடந்த உள்ளூராட்சி மன்றங்களில் ஜக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர்கள் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

About Unknown