கிளி­நொச்­சியில் தொடரும் அட்­ட­காசம் : அச்சத்துடன் வாழும் மக்கள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கிளி­நொச்­சியில் தொடரும் அட்­ட­காசம் : அச்சத்துடன் வாழும் மக்கள்

அண்மைக்கால­மாக கிளி­நொச்சி பகு­தி­க­ளி­லுள்ள கோயில்கள், வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள் என பல இடங்­களில் கொள்­ளைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
அந்த வகையில் நேற்று அதி­காலை 2 மணி­ய­ளவில் பன்­னங்­கண்டி பகு­தியில் உள்ள வீடு­களில் புகுந்த கொள்­ளை­யர்கள் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்­ளையில் ஈடுபட்­டுள்­ளனர்.
அப்­ப­கு­திக்கு சென்ற கொள்­ளை­யர்கள் வீட்டின் உரி­மை­யா­ளரை அழைத்து அவரை கத்­தி­மு­னையில் கொள்­ளையில் ஈடு­பட்ட­ போது, அயல் வீடு­க­ளிலி­ருந்து சத்­தங்கள் எழுப்­பி­ய­தை­ய­டுத்து கொள்­ளை­யர்கள் தப்­பி­ச்செல்ல முயன்­றுள்­ளனர். அய­ல­வர்கள் விரட்டிச் சென்று உந்­து­ரு­ளியை பிடித்­த­போது அவர்கள் கொண்டு வந்த ஆயு­தங்­க­ளான வாள்கள், கூரிய கத்­திகள் மற்றும் உந்­து­ரு­ளி­போன்றவற்றை கைவிட்டு தப்பிச் சென்­றுள்­ளனர்.
இது தொடர்­பாக பன்­னங்­கண்டி மக்கள் பொலி­ஸா­ருக்கு அறி­வித்த போது பல மணி­நேரம் கழித்து அப் பகு­திக்கு பொலிஸார் வரு­கை­தந்­த­மையால் கிராம மக்கள் விசனம் தெரி­வித்­துள்­ளனர். சம்­பவ இடத்­துக்கு வரு­கை­தந்த பொலிஸார் கொள்­ளை­யர்கள் விட்டுச் சென்ற தட­யப்­பொ­ருட்­களை எடுத்துச் சென்றுள்ளனர். 
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர்.

About Unknown