ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் வேளையில் இன்று திங்கட்கிழமை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஜெனிவாவில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளனர்.
ஜெனிவா ரயில் நிலையத்திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்பெயர் தமிழர்கள் அங்கிருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் முன்றல் வரை பேரணியாக செல்லவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியல்
பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம்பெயர் தமிழர்கள் ஜெனிவா வந்துள்ளனர்.
இலங்கை அரசின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா. பாராப்படுத்த வேண்டும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு ஐ.நா. கண்காணிப்பின் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்