புலம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

புலம்­பெயர் தமி­ழர்கள் இன்று ஜெனி­வாவில் போராட்டம்.!

Image result for ஜெனி­வாஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் 37ஆவது கூட்டத் தொடர் நடை­பெற்­று­வரும் வேளையில் இன்று திங்­கட்­கி­ழமை புலம்­பெ­யர்ந்த தமி­ழர்கள் ஜெனி­வாவில் ஆர்ப்­பாட்டப் பேர­ணியை நடத்­த­வுள்­ளனர். 
ஜெனிவா ரயில் நிலை­யத்­திற்கு முன்னாள் ஒன்று கூடும் புலம்­பெயர் தமி­ழர்கள் அங்­கி­ருந்து ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்றல் வரை பேர­ணி­யாக செல்­ல­வுள்­ளனர். இந்த ஆர்ப்­பாட்ட பேர­ணியல் 
பங்­கேற்­ப­தற்­காக ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து புலம்­பெயர் தமி­ழர்கள் ஜெனிவா வந்­துள்­ளனர். 
இலங்கை அரசின் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் ஐ.நா. பாராப்­ப­டுத்த வேண்டும், தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வுக்கு ஐ.நா. கண்­கா­ணிப்பின் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் போன்ற கோரிக்­கை­களை முன்வைத்து புலம்பெயர் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்

About Unknown