Related imageஇலங்கையில் அனைவராலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பேஸ்புக் பார்வையிட முடியும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது.
 பேஸ்புக் அதிகாரிகள், அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை தினம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைவாக நாளை மறுநாள் இலங்கை முழுவதும் பேஸ்புக், வட்ஸ்ஆப் மீதான தடை நீக்கப்படும் என்று தொலைத் தொடர்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
 கண்டியில் நடைபெற்ற வன்முறை சம்பங்கள் வேறு இடங்களுக்கும் பரவாது தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் மீதான தற்காலிக தடை ஏற்படுத்தப்பட்டது.
இதனூடாக வன்முறை பரவுவதை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது