வடக்கு பிலிப்பைன்ஸிலுள்ள விமான நிலையம் ஒன்றில் இருந்து இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் வீடு ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளாகியதில் 7 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் 2 விமானிகள் உள்பட 6 பேர் பயணம் செய்துள்ளனர்.
குறித்த விமான விபத்திற்கான காரணம் இது வரை வெளிவரவில்லை, பொலிஸாரும் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.