கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து இதுவரையில் கண்டியில் மாத்திரம் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கண்டி பகுதியை தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தமாக நாட்டில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.