வவுனியாவில் பிறந்து 2 நாட்களேயான சிசு கடத்தல்: பெண் ஒருவர் கைது - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வவுனியாவில் பிறந்து 2 நாட்களேயான சிசு கடத்தல்: பெண் ஒருவர் கைது

வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களில் காணாமற்போன சிசு அநுராதபுரத்தில் உள்ள வைத்தியசாலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிசுவை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெப்பத்திகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பெண்ணை வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணித்தாய் என்ற போர்வையில் வவுனியா வைத்தியசாலைக்கு சென்று சிசுவை குறித்த பெண் கடத்திச் சென்றுள்ளார்.

About Unknown