உயிரோடு நகர்த்தப்படும் அரச மரம் ; இரணைமடு மக்கள் மத்தியில் சந்தேகம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

உயிரோடு நகர்த்தப்படும் அரச மரம் ; இரணைமடு மக்கள் மத்தியில் சந்தேகம்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுப் பகுதிக்கருகில் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அண்மையில் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கிருந்த அரச மரமும்  உயிரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அரச மரத்தைச் சுற்றி பாரியளவில் குழியினை ஏற்படுத்தி மரம் பாதிக்கப்படாத வகையில் உயிரோடு நகர்த்தும் முயற்சிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே குறித்த அரச மரம் மற்றும் ஏற்கனவே குளக்கரையில்  இருந்து எடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பிரிதொரு இடத்தில் வைக்கப்படாலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

About Unknown