நடைமுறை அரசியல் குழப்பங்கள் குறித்து இன்றைய தினமே விவாதம் நடத்தப்பட வேண்டும் என பொது எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்த நிலையில், அது குறித்து ஆராய 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு உடனடியாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இதனையடுத்து, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வை இன்று மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமையினால் பிரதமர் பதவி நீக்கம், தனியாட்சி கோஷங்கள் மற் றும் கட்சிகளின் வெவ்வேறான குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு தினமும் நாட்டின் அரசியல் பரபரப்பாகும் சூழலில் இன்று பாராளுமன்றம் கூடியது.
எனினும் நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக விவாதிக்குமாறு மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைய கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.