பாராளுமன்ற அமர்வு நேரம் நீடிப்பு. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பாராளுமன்ற அமர்வு நேரம் நீடிப்பு.

பாராளுமன்ற அமர்வை இன்று மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடைமுறை அரசியல் குழப்பங்கள் குறித்து இன்றைய தினமே விவாதம் நடத்தப்பட வேண்டும் என பொது  எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்த நிலையில்,  அது குறித்து ஆராய 15  நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு உடனடியாக சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இதனையடுத்து, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பாராளுமன்ற அமர்வை இன்று மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலை­மை­யினால் பிர­தமர் பதவி நீக்கம், தனி­யாட்சி கோஷங்கள் மற் றும் கட்­சி­களின் வெவ்­வே­றான குழுக் கூட்­டங்கள் நடத்­தப்­பட்டு தினமும் நாட்டின் அர­சியல் பர­ப­ரப்­பாகும் சூழலில் இன்று பாராளுமன்றம் கூடியது.
எனினும்  நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக விவாதிக்குமாறு மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன விடுத்த கோரிக்கைக்கு அமைய கட்சி தலைவர்கள் கூட்டம் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

About Unknown