பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பக்திகா மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) கடந்த வாரம் அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், தெரிக் இ தாலிபான் அமைப்பின் துணைத்தலைவர் காலித் மெஹ்சூத் கொல்லப்பட்டதாக தற்போது அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது.
இப்போது காலித் மெஹ்சுத் பதவிக்கு கமாண்டர் முப்தி நூர் வாலி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மாதத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்க ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் ஹக்கானி தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.