இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ள தாய்லாந்து அரசாங்கம் பாராளுமன்றத்தில் அதற்காக சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தாய்லாந்தின் வர்த்தக செயற்பாட்டு பிரிவின் நிறைவேற்று இயக்குநர் ஒரமன் சப்தவீதும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையை தாய்லாந்துடனான தெற்காசியாவின் வர்த்தக பங்காளியாக மாற்றும் நோக்கில் இலங்கையுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம்.
இலங்கையானது தெற்காசியாவில் குறிப்பிடத்தக்களவு சந்தை வாய்ப்ைப கொண்டுள்ளது. அத்தோடு கடந்த ஐந்து வருடகாலப்பகுதியில் சராசரியாக 6.5 சதவீதம் என்ற ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சிைய பதிவு செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
தாய்லாந்தின் வர்த்தக செயற்பாட்டு பிரிவின் வல்லுநர்கள் இலங்கையுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் முழுமையான ஆய்ைவ நிறைவுசெய்துள்ளனர். ஆனாலும் இலங்கையுடன் இவ் ஒப்பந்தம் தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முன்னர் பாராளுமன்றத்தின் அனுமதிைய பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.