அதனை விடுத்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையோ விசாரணையோ முன்னெடுக்கப்படாது என்று இராணுவப் பேச்சளார் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கேள்வி: பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோ ஏன் இலங்கைக்கு அழைக்கப்படுகின்றார்?
பதில்: ஆலோசனை கலந்துரையாடல் ஒன்றுக்காக அவரை இராணுவத் தளபதி அழைக்கின்றார்.
கேள்வி: அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்: இல்லை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
அவர் பாரிய குற்றங்கள் எதையும் செய்ததாக கருதவில்லை. அந்த இடத்தில் பிரபாகரன் மற்றும் தனி ஈழம் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேசியிருக்கின்றனர்.
அதனால் அந்த அதிகாரி அவ்வாறு நடந்துகொண்டிருக்கின்றார். அதில் எந்தப் பெரிய தவறையும் நாங்கள் காணவில்லை.