செல்பியால் காப்பாற்றப்பட்ட பெண்..... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

செல்பியால் காப்பாற்றப்பட்ட பெண்.....

Related image உண­வ­ளிக்­காமல் தாத்தா கொடு­மைப்­ப­டுத்­தி­ய­மையால்  16 கிலோ எடைக்கு தள்­ளப்­பட்டு உயி­ருக்கு போரா­டிய ஒரு பெண் மருத்­து­வர்­களின் உத­வியால் காப்­பாற்­றப்­பட்­டுள்ளார். தற்­போது ஆரோக்­கி­ய­மாக உள்ள இவர் சொந்த தாத்­தாவால் உண­வ­ளிக்­கப்­ப­டாமல் தனக்கு நேர்ந்த கொடு­மையை  புகைப்­ப­டங்­க­ளாக வெளியிட்டு இணை­யத்தில் வைர­லா­கி­யுள்ளார். 
 கியோட்டோ என்ற பகு­தியில் வசித்த வந்த இந்தப் பெண் எடுத்த செல்பி படங்கள்  தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவை பத்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் இவர் காப்­பாற்­றப்­பட்டு மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்ட போது எடுத்த படங்கள் என்று அறி­யப்­ப­டு­கின்­றன. இவ­ரது இடுப்பு பகுதி எலும்­புகள் கூட தெள்­ளத்­தெ­ளி­வாக தெரியும் அள­விற்கு உடலில் சதையோ, தசை வலி­மையோ இன்றி காணப்­பட்­டுள்ளார்.
 டுவிட்­டரில் படங்கள் பகிர்ந்த போது இந்த பெண், "சாப்­பிட தடை செய்­யப்­பட்­டி­ருந்த காலத்தில் நான்.." என மேற்­கோ­ளிட்டு கூறி­யி­ருந்தார். தாத்தா  இல்­லாத சம­யத்தில் அல்­லது திருட்­டுத்­த­ன­மாக வீட்டில் இருக்கும் உணவை நான் சாப்­பி­டு­வதை பார்த்­து­ விட்டால், என் தாத்தா எனது வயிற்றில் உதைப்பார், என் வாயில் இருக்கும் உணவை அவ­ரது கையை விட்டு பிடுங்கி வெளியே வீசுவார் என்று தனக்கு நேர்ந்த அவ­லங்­களை பகிர்ந்­தி­ருக்­கிறார்.
 சில சமயம் தன்னை உடல் ரீதி­யாக வன்­கொ­டு­மைக்கு ஆளாக்கி, உண்ட உணவை வாந்தி எடுக்க வைத்த சம்­ப­வங்­களும் நடந்­துள்­ளன. ஒரு கட்­டத்தில் தான் வெறும் 16.8 கிலோ எடைக்கு தள்­ளப்­பட்டேன்.
 என்னைப் போன்று வன்­கொ­டு­மை­க­ளுக்கு ஆளாகும் பெண்கள் இன்னும் எத்­த­னையோ பேர் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் பயப்படாமல் வெளியே உதவி நாடுங்கள். நேரம் தாமதப்படுத்தாமல், உங்கள் நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன் உதவி நாடுங்கள் என்று கூறியுள்ளார். 

About Unknown