உள்ளூராட்சிமன்ற தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நடந்து முடிந்த தேர்தலில் வெளிவந்திருக்கும் பெறுபேறுகளின் பிரகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 45வீதமான வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளன. அது ஜனவரி 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி பெற்றுக்கொண்ட வாக்கு வீதத்தைவிட குறைவான வாக்குவீதமாகும். இந்த பெறுபேறுகளின் பிரகாரம் நாட்டின் பெரும்பான்மையான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவுக்கு எதிராகவே அளித்துள்ளமை தெளிவாகின்றது.
மேலும் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் கலந்துரையாடினேன். அரசாங்கத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு முன் செல்ல இரண்டுபேரும் இணக்கம் தெரிவித்தனர். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்று நாட்டின் பிரதமராகவோ அல்லது பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கோ முன்னாள் ஜனாதிபதி கனவு கண்டுகொண்டிருந்தபோதும் அது இடம்பெறப்போவதில்லை. முன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் பதவி வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ ஐக்கிய தேசிய கட்சியோ இதுவரை முன்மொழியவில்லை.
2015ஆம் ஆண்டு ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கே ஆளும் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைக்கப்பெற்றது. அதனை தொடர்ந்து முன்னுக்கு கொண்டுசெல்ல நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இந்த தேர்தலில் பேருவளை தொகுதி தோல்வியடைந்ததுடன் என்னை கண்டு பிடிக்க முடியாமல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். டலஸ் அழகப்பெருமவைப்போன்று நான் அமெரிக்காவுக்கு தப்பிச்செல்லவில்லை. வீட்டில்தான் இருக்கின்றேன் என்பதை அவருக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
அத்துடன் மக்கள் ஆணையின் பிரகாரம் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போராட்டத்தில் தொடர்ந்து நிலைத்திருப் பேன். அதேபோன்று 2020 க்கு பிறகு ஜனாதிபதியை மீண்டும் நியமிக்கவும் நடவடிக்கை எடுப் பேன்.