ஜெனிவாவின் பிரித்தானிய மிஷன் பணிமனையில் நேற்று வெ ள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடனான சந்திப்பின்போதுமே கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
26 நாடுகளைச் சேர்ந்த 40 உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருந்தது. எனினும் சிலவிடயங்களைத் தவிர பல விடயங்கள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டபோதும் அது நடைமுறைக்கு வராத நிலை காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் நகர்வுகள் வேகமாக இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.
அரசாங்கத்தின் சார்பில் இங்கு வருகின்ற பிரதிநிதிகள் பல்வேறு கதைகளை கூறமுடியும். உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் நம்பிக்கையை வெல்வதற்கு இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கூறவும்முடியும். குறிப்பாக அரசியல் யாப்பு உருவாக்கப்பணிகள் நல்லிணக்க நகர்வுகள் குறித்து பிரஸ்தாபிக்க முடியும். எனினும் இவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை. தற்போது இலங்கையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடிகளைகொடுத்துள்ளது. ஆகவே கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இது வரையில் நிறைவேற்றப்படாமை தொடர்பிலும் தற்போதைய தேர்தல் முடிவுகளால் அதனை தொடர
முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் பல்வேறு காரணங்களை உறுப்பு நாடுகளுக்கு
வழங்கக்கூடும். இவற்றை உறுப்பு நாடுகள் மற்றும் ஜெனிவாப் பேரவை ஏற்றுக்கொள்
ளக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
எவ்வாறிருப்பினும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவுக்கு வழங்கிய வாக்குறுதியை ஒருவருட காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உறுப்பு நாடுக
ளையும் அதன் பிரதிநிதிகளையும் கேட்டுக் கொள்கிறது என்ற வகையில் சுமந்திரன் எம்.பி. கோரிக்கைவிடுத்துள்ளார்.