ஆசி­ரியர் பொலிஸாரால் கைது... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஆசி­ரியர் பொலிஸாரால் கைது...

கொழும்பு கொட்­டாஞ்­சேனையிலுள்ள பிர­பல தமிழ்  பாட­சா­லை­யொன்றில் 9 வயது மாணவன் ஒரு­வனை அடித்து காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய ஆசி­ரியர் ஒருவர்  நேற்று முன்­தினம் கொட்­டாஞ்­சேனை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.


            கொட்­டாஞ்­சே­னையின் பிர­பல தமிழ்  பாட­சா­லையில் கல்வி கற்­பிக்கும் 25 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இவ்­வாறு கைது­ செய்­யப்­பட்­டுள்ளார்.
இச்­சம்­பவம் குறித்து  மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் பிர­பல பாட­சா­லை­யொன்றில் இவ்­வாண்டு தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவர் ஒரு­வ­னை அவ்­வ­குப்பில் கல்வி கற்­பிக்கும் ஆசி­ரியர் ஒருவர் கடு­மை­யாக தாக்­கி­யுள்ளார்.
இவ்வாறு தாக்­கு­த­லுக்­குள்­ளான 9 வயது மாணவன் கொழும்பு வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்ற நிலையில் இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­ப­ரான குறித்த ஆசி­ரியர் நேற்று முன்­தினம் கொட்­டாஞ்­சேனை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார். 
இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட ஆசியர் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழு ம்பு கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

About Unknown