மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை .................... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை ....................

Image result for கே. பழனிச்சாமி நரேந்திரமோடிஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 79 தமிழக மீனவர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்காக தமது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
எனினும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தமையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் (03) கைது செய்யப்பட்ட 13 மீனவர்கள் உள்ளிட்ட 84 மீனவர்களையும் , மீனவர்களின் 159 படகுகளையும் மீட்பதற்கு இலங்கை அரசுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

About Unknown