மடு தேவா­ல­யத்­திற்கு அருகில் பௌத்த விகாரை அமைப்­பதை தடுத்து நிறுத்­தவும் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மடு தேவா­ல­யத்­திற்கு அருகில் பௌத்த விகாரை அமைப்­பதை தடுத்து நிறுத்­தவும்

Related imageமன்னார் மடு தேவா­லய நுழை­வாயில் அரு­கா­மையில் இரா­ணுவத்தி­னரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கும் எடுக்கும் முயற்­சியை உட­ன­டி­யாக தடுத்து நிறுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கூறி மன்னார் பிர­ஜைகள் சங்­கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலா­சார அமைச்­ச­ருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்­வைத்­துள்­ளன. 
          
இந்த இடத்தில் சிற்­றுண்­டி­ச்சாலை ஒன்றை நடத்­தி­வரும் இரா­ணுவத்தினர் குறித்த இடத்தில் உள்ள மரத்­திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக கூறும் மன்னார் பிர­ஜைகள் சங்கங்கள் இந்த இடத்தில் இவ்­வா­றான செயலை செய்ய ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. அது மடு தேவா­ல­யத்­திற்கு செய்யும் மிகப் பெரிய அவ­ம­ரி­யாதை எனவும் குறிப்­பிட்­டுள்­ளன. 
இப்­போ­தைக்கும் இவ்­வி­டத்தை வணக்க வழி­பா­டுகள் நடத்தும் இட­மாக இரா­ணுவத்தினர் மாற்­றி­யுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ள பிர­ஜைகள் சங்கங்கள் பிர­பல கிறிஸ்­தவ தேவா­லயம் உள்ள இடத்தில் இவ்­வா­றான செயலை அனு­ம­திக்க முடி­யாது என குறித்த கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.
வடக்கில் பல இடங்­களில் புத்தர் சிலை­களை வைத்து வணக்க வழி­பா­டுகளில் ஈடு­ப­டு­கின்ற இரா­ணுவத்தினர், அவ்­வி­டத்தை விட்டு செல்லும் போது, சிலை­களை அகற்­றாமல் செல்­வதன் மூலம் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சினை, தேசிய ரீதி­யான பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுப்­பதால் இந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்­ப­தற்கு முன்னரே இச்செயற்பாட்டை நிறுத்தநடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டும் வட மாகாண சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

About Unknown