இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி இலங்கை வரு­கின்றார்.! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி இலங்கை வரு­கின்றார்.!

Image result for ஜக்கோ விதோதோஇரண்டு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­தினை  மேற்­கொண்டு   இந்­தோ­னே­சிய ஜனா­தி­பதி ஜக்கோ விதோதோ நாளை   24 ஆம் திகதி  புதன்­கி­ழமை  இலங்கை வர­வுள்ளார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்­பிற்­கி­ணங்க இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி இலங்­கைக்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ள­வுள்ளார்.
                                  இவ்­வி­ஜ­யத்தின் போது இலங்கை மற்றும் இந்­தோ­னே­ஷியா ஆகிய இரு நாட்டு தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான உத்­தி­யோக பூர்வ சந்­திப்பு  இடம்­பெ­ற­வுள்­ளது. அத்­தோடு பிர­தமர் மற்றும் வெளி­வி­வகார அமைச்சர் ஆகி­யோ­ரையும்  இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி சந்­திக்­க­வுள்ளார். 
 இச் சந்­திப்பின்  போது, இந்­தோ­னே­ஷியா இலங்­கைக்­கி­டை­யி­லான இரு தரப்பு உற­வுகள் பற்றி கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­தோடு  இவ் விடயம் தொடர்பில் கூடிய  கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 
இதே வேளை இரு தரப்பு உற­வுகள் தொடர்­பான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களும் கைச்சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன.  இரு தரப்பு புரிந்­து­ணர்வு விட­யங்கள்  தவிர்ந்து  பொருளாதாரம்  வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை கள் நடத்தப்படவுள்ளன.

About Unknown