அதிரடி தீர்ப்பு வழங்கிய இளஞ்செழியனின்........ - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அதிரடி தீர்ப்பு வழங்கிய இளஞ்செழியனின்........

Related imageகிளி­நொச்­சியில் 12 வயது சிறு­மியை பாலியல் வன்­பு­ணர்வு புரிந்த நப­ருக்கு 10 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்தண்­ட­னையும், 2 இலட்சம் ரூபா தண்­டப்­ப­ணமும் விதித்து யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் தீர்ப்­ப­ளித்­துள்ளார்.
                        கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிளி­நொச்­சியில் 12 வயது நிரம்­பிய சிறு­மியை கடத்திச் சென்று தேவா­ல­யத்­திற்கு பின்­னா­லுள்ள வீதியில் வைத்து பாலியல் வல்­லு­றவு புரிந்­தமை தொடர்­பான வழக்­கா­னது நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்ட போதே நீதி­பதி இந்தத் தீர்ப்பை வழங்­கினார்.
குறித்த சம்­பவம் தொடர்­பாக பாதிக்­கப்­பட்ட சிறுமி நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­த­துடன் எதி­ரியும் தன் மீதான குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டி­ருந்தார். அத்­துடன் தான் மது­போ­தையில் இருந்த போதே இச்சம்­பவம் நடந்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.
எதி­ரி ­த­ரப்பு சட்­டத்­த­ரணி குறித்த நபர் திரு­மணம் முடித்து பிள்­ளை­க­ளுடன் வாழ்ந்து வரும் நிலையில் அவ­ருக்கு குறைந்த தண்­டனை வழங்க வேண்டும் என கருணை விண்­ணப்பம் செய்தார்.
இதன்­போது அரச சட்­ட­வாதி நாக­ரட்ணம் நிஷாந்த் குறித்த குற்றச் செய­லா­னது பார­தூ­ர­மான குற்றச்செயல் எனவும் அதற்கு ஆகக்­கூ­டி­யது 20 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்தண்­ட­னையும் குறைந்­தது 10 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் விதிக்க சட்டம் பரிந்­து­ரைப்­ப­தாக குறிப்­பிட்டார்.
இத­னை­ய­டுத்து குறித்த சிறு­மியை கடத்தி சென்­ற­மைக்­காக 2 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்தண்­ட­னையும், பாலியல் வன்­பு­ணர்வு புரிந்­த­மைக்கு 10 ஆண்­டுகள் கடூ­ழிய சிறைத்தண்­ட­னையும் விதித்­த­துடன் இரண்டு தண்­ட­னையும் ஏக காலத்தில் அனு­ப­விக்­கவும் நீதி­பதி அனு­ம­தி­ய­ளித்தார்.
மேலும் இக்குற்­றங்­க­ளுக்கு 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை கட்­டத்­த­வறின் 6 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 2 இலட்சம் ரூபா நஷ்டஈடும்  கட்டத்தவறின் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

About Unknown