லண்டனில் இரு தமிழர்களை தாக்கியவர்களின் நிலை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

லண்டனில் இரு தமிழர்களை தாக்கியவர்களின் நிலை

லண்டனில் மர்ம நபர்களால் இரண்டு தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் உள்ள ஸ்டான்மோர் பகுதியில் வைத்து இலங்கையை பூர்வீகதமாக கொண்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் 15ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த இரண்டு பேர் தற்போது குணமாகியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About UK TAMIL NEWS