இந்திய தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட 8 ஆம் வகுப்பில் பயின்று வந்த 13 வயது மாணவி ஒருவர் கர்ப்பமாகத் திரும்பிய சம்பவம் அதிர்ச்சி அடையசெய்துள்ளது.
தென்கிழக்கு டெல்லியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், இரண்டு மாதத்துக்கு முன் மே 6 ஆம் திகதி ஐஸ்கிரீம் வாங்கி வருதாகச் சொல்லிவிட்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் வீட்டுக்குத் திரும்பி வரவே இல்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். ஆனால், ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
தொடர்ந்து போலீசார் அந்தச் சிறுமியின் தந்தையிடம் பணம் கேட்டு நச்சரித்துள்ளனர். இதையடுத்து அவர் பணம் கொடுத்து தேடிக் கண்டுபிடிக்கக் கூறியுள்ளார்.இவ்வாறாக போலீசாருக்கு அவர் ரூ.45 ஆயிரம் வழங்கி உள்ளார்.
ஆனாலும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 10 ஆம் திகதி, சிறுமியின் வீட்டின் அருகில் வசித்த ஒருவன் சரணடைந்தான்.
அவன் மூலமாக போலீசார் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 3 வார கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமியின் வீட்டருகே ஓட்டல்களில் வேலைபார்த்த 12 பேர் குடியிருந்துள்ளனர்.
அவர்கள்தான் சிறுமியை கடத்தி பாலியல் வன்முறை செய்துள்ளனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
போலீசார் சம்பந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி சிறுமியை தேடுவதற்கு பணம் கேட்ட போலீசார் மீதும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.