சென்னை பாரிமுனையில் உள்ள வங்கிக் கட்டடத்தின் மீது ஏறி டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் காமராஜ், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதவி விலக வலியுறுத்தி குறளகம் அருகே உள்ள வங்கி கட்டடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
டிராபிக் ராமசாமியிடம் தொடர்ச்சியாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கதிராமங்கள போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும், ஊழல் செய்த அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்