இறை விசுவாசத்துக்காய் வித்தானவர்களுக்கு விழா - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இறை விசுவாசத்துக்காய் வித்தானவர்களுக்கு விழா

விசுவாசத்திற்காக தங்கள் இன்னுயிர்களை விசுவாச வித்தாக விதைத்திட்ட வேதசாட்சிகளை நினைவுகூர்ந்து வருடா வருடம் வேதசாட்சிகள் சமுக நல அமைப்பு முன்னெடுக்கும் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது. இவ் விழா திருப்பலி அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்குரிய ஆயர் கின்சிலி சுவாம்பிள்ளை அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இவ் திருவிழாவுக்கு பங்குத்தந்தை இ.செபமாலை தலைமை தாங்கினார் அமைப்பின் தலைவர் அமிர்தம் வரவேற்புரையாற்றினார் இந்தியாவில் காரங்காட்டில் இருக்கும் வேதசாட்சிகள் சமுகத்தை சேர்ந்த அருட்தந்தையர்கள் கலந்து சிறப்பித்ததோடு வேதசாட்சி சமுக நல அமைப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தில் ஒரு அங்கமாக அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் விளையாட்டில் திறன் பெற்றவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள் கலைத்துறையில் சிறப்பானவர்களுக்கு பரிசுகளும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது. இவ்விழாவின் போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் குணசீலன் ஆகியோரும் வாழ்வுதயம் கறிற்றாஸ் இயக்குனர் அருட்பணி ஜெயபாலன் அடிகளாரும் ஆயர் அவர்களின் செயலாளர் அருட்பணி நீக்கிலாஸ் அடிகளாரும் கலந்துகொன்டனர் இதன்போது மறைசாட்சிகள் என்ற கையெடு அமைப்பின் ஆய்வாளர் திரு அந்தோனி பிச்சை அவர்களினால் வெளியிடப்பட்டது பி்ன்னர் மேலும் மறைசாட்சிகள் வரலாறு தொடர்பான விளக்கப்படங்கள் ஆயர் அவர்களால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது இதன்போது குறிப்பாக எமது சமூகத்தை சேர்ந்த கவிஞர் மன்னார் பெனில் கலைச்சுடர் மற்றும அரங்கச்செல்வி என்ற விருதுகளை பெற்ற நாடக ஆசிரியர் வசந்தி சுவான்தற்குருஸ க்கும் உலக கிண்ண ரோல் போல் விளையாட்டில் இலங்கை அணிசார்பாக கலந்து கொண்ட எம் சமூகத்தை சேர்ந்த யோன்சன் திவ்யா என்பவருக்கும் பாராட்டி கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னம் வழங்கப்பட்டது

About UK TAMIL NEWS