எனது பதவி நீக்­கம் திட்­ட­மிட்ட ஒரு சதி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

எனது பதவி நீக்­கம் திட்­ட­மிட்ட ஒரு சதி

விசா­ர­ணைக்­குழு இரு அமைச்­சர்­க­ளைத்­தான் பதவி வில­க­வேண்­டும் என்று பரிந்­து­ரைந்­தி­ருந்­த­போதே, நான்கு அமைச்­சர்­க­ளை­யும் மாற்­று­வ­தற்கு ரெலோ அமைப்­பின் தலை­வர், முத­ல­மைச்­ச­ருக்கு சம்­ம­தம் தெரி­வித்­தி­ருந்­தார்.
பிழையே செய்­யாத என்னை மாற்­று­வ­தற்கு எமது கட்­சி­யின் தலைமை முன்­னரே முடி­வெ­டுத்­து­ விட்டு, இப்­போது யாப்பு விதி­களை மீறி விட்­ட­தா­கச் சப்­பைக்­கட்­டுக் கார­ணங்­களை புனைந்து கொண்­டி­ருக்­கின்­ற­னர்.
பிழை செய்­யா­த­வரை நீங்­கள் திட்­ட­மிட்­டுச் சதி செய்து வெளியே அனுப்­பு­வ­தற்­கு­ரிய தண்­ட­னை­க­ளைக் கட­வுள் நிச்­ச­யம் வழங்­கு­வார்.
இவ்­வாறு வடக்கு மாகா­ணப் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வவு­னி­யா­வில் வைத்து ஊட­க­வி­ய­லா­ளர்­கள் நேற்று எழுப்­பிய கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கக் கையெ­ழுத்­திட்­டமை தொடர்­பில் விளக்­கம் கோரி எனக்­குக் கடி­தம் அனுப்­பப்­பட்ட நே­ரத்­தில், என்­னைக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­ய­தா­கத் தெரி­ வித்து அமைச்­ச­ர­வை­யி­லி­ருந்து நீக்­கு­மாறு முத­ல­மைச்­ச­ருக்­குக் கட்­சிச் செய­லா­ளர் கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்.
முத­ல­மைச்­சர் நிய­மித்த விசா­ர­ணைக்­குழு என்னை விடு­வித்த பின்­ன­ரும், நான் ஊழல் செய்­ய­வில்லை என்று தெரிந்த பின்­ன­ரும் என்­னைப் பதவி நீக்க முத­ல­மைச்­ச­ருக்கு எனது கட்சி இணக்­கம் தெரி­வித்­தது. கட்­சி­யில் இருக்­கின்ற அமைச்­சர் ஊழல் செய்­ய­வில்லை என்­றால் அவ­ரைப் பாது­காக்­க­வேண்­டும்.
ஆனால் அதை­வி­டுத்து என்னை அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­ற­வேண்­டும் என்­ப­தில் கட்­சித் தலைமை குறி­யாக இருந்­த­மையை இதி­லி­ருந்து அறிய முடி­யும்.
நான் விசா­ர­ணைக்­கு­ழு­வில் தோன்­ற­மாட்­டேன் என்­ப­தால் எனக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க முத­ல­மைச்­சர் காத்­தி­ருப்­ப­தா­கக் கூறி­யுள்­ளார். விசா­ர­ணைக் குழு முன்­பாக நான் தோன்­ற­மாட்­டேன் என்று சொல்­ல­வில்லை.
சட்­ட­ரீ­தி­யான – சுயா­தீ­ன­மான எந்­த­வொரு விசா­ர­ணைக் குழு முன்­னி­லை­யி­லும் தோன்­று­வ­தற்­குத் தயா­ராக இருக்­கின்­றேன் என்று திரும்­பத் திரும்­பக் கூறி­யுள்­ளேன்.
தெரி­வுக் குழுவை அமைக்­கு­மாறு முத­ல­மைச்­ச­ரைக் கோரி­யி­ருந்­தேன். அதைச் செய்­யத் துணி­வில்­லாத முத­ல­மைச்­சர், நான் தன்­னால் நிய­மிக்­கப்­ப­டும் விசா­ர­ணைக்­குழு முன்­பா­கத் தோன்­ற­மாட்­டேன் என்­ப­தற்­காக நட­வ­டிக்கை எடுக்க முயற்­சிக்­கின்­றார் -– என்­றார்.

About UK TAMIL NEWS